Thursday, December 4, 2008
மூஞ்சிப் புத்தக மோகம்!
Monday, November 17, 2008
திரு.போலி!
Tuesday, October 14, 2008
இவனும் அரசியல்வாதி!
மதுரைக்கு வந்த சோதனை!
ஆயதமும் பல செய்து - இப்பாரதனை
Thursday, September 4, 2008
மீண்டும் தொடர்கிறேன்....
முடிந்துவிட்டது.....
சமூகத்துக்குக் கவிபாட மீண்டுமோர் காலமும்
மலர்ந்துவிட்டது....
இன்னும் ஆழமாய்.. இன்னும் அகலமாய் கவிபாட
துணிந்துவிட்டேன்...
புதிய காளமேகத்திற்கு ஆதரவளித்துவரும் அனைவருக்கும்
நன்றிகூறி என் பணி தொடர்கிறேன்.....!
Thursday, July 17, 2008
ஏ.எல்லிற்காய் காத்துக்கிடக்கிறேன்....
குறைகளைக் கடந்து கல்வியில் என் குறை குறைத்து
ஏ.ஏல்லில் மூன்றேஏ சித்திபெறவே இந்த இடைவெளி.....
பொதுநலத்தைக் கடந்த சுயநலந்தானே மனிதன்?(!)
ஆனால் பாருங்கோ, “சாக்”கு மூட்டையினாலும்... வேலையற்ற
தேர்தலினாலும் என்பாடு திண்டாட்டம்... அட நான்மட்டுமல்ல
ஏ.எல்லெழுதும் அத்தனைக் கண்மணிகளுக்கும் இது பொதுவே!
பாவம் பாதுகாப்பு விடயத்தில் அவைக்கும் திண்டாட்டம்.....
இலங்கையில கொண்டாட்டம் போய்த் திண்டாட்டம் வந்ததுவெ....
ஆண்டான் முதல் ஆளக்கொணந்தான் வரை திண்டாட்டம்....
வீட்டில கத்தீனம் - இது போதும் இப்போதைக்கு - கடவுள் கருணையால்
ஏ.எல். எண்டைக்காவது முடிஞ்சதும் மீண்டும் வசை பாடுறன்....
எங்கட டீ.வி. ஸ்ரைலில சொல்றதென்டால் “அதுவரைக்கும் புதிய காளமேகத்தில் ஒரு குட்டி பிறேக்...”
தெரியுந்தானே இவேன்ட குட்டி பிறேக்!!!(?)
Sunday, June 1, 2008
நைட் கிளப்ஸ்

கழிவது இன்பமெனினும் - எங்கள் பண்பாட்டிற்குத் துன்பம்!
காதலனுடன் காதலி கூடினால் காதல் வாசம் - கண்டவனுடன்
கண்டவளும் ஆடினால் வீசுவது நாற்றம் !
முந்தை நாள் பிறந்தவன் - தன்னிலை அறியாதவன்
பித்துக் கொண்டு கற்றுக்கொண்ட பழக்கமெல்லாம்
நாகரீகத்தின் உச்சமென உச்சி மோர்ந்தால் - பாவம்
அழிவது நானுமல்ல என் பண்புமல்ல - நல்ல மனிதன்
உள்ளவரை பூமி பிழைக்கும் - பூமி பிழைக்கும் வரையில்
நல்லவன் வாழ்வான் - அழிவது நாமல்ல! அறியாதவனே
அழிந்திருப்பதேன்றால் சமஸ்கிருதத்துடனே அன்றேல்
இலத்தீனுடனே அழிந்திருக்கும்! - அழிவதற்கு நாங்கள்
அற்பர்கள் அல்ல! - சிந்தித்து பார் நீ யாரெனப் புரியும்.....
உன் வரலாறும் தெரியும்.....!
Thursday, May 15, 2008
குடைகளுக்குள்ளே...

குடைகளுக்குள்ளே குட்டிக் குட்டி ராஜ்ஜியங்கள்
நடத்துகிறார்கள் - நவீன யுகக் காதலர்கள்!
கடற்கரையின் கற்புளுதிகளுக்குள் கலாசாரத்தின்
உயர்ச்சிகள் உயிரற்ற ஜடமாய் புதைந்து போயினவே!
காலம் மாற கலாசாரமும் மாறவேண்டும் என
மாற்றம் பேசும் உள்ளங்களே... ஐநூராண்டு முன்
பிறந்த கத்துக்குட்டிகளின் மிருக கலாசாரத்துள்
ஆயிரமாண்டு பழமைபெற்ற எம் கலாசாரங்கள்
கலந்து கலவையாகி அழிந்து போவதோ?
தாரத்திற்காய் தாயை விற்கும் ஈனக்கூட்டம்
நாங்கள் என்றால் - அட போடா மடையா அது நாமல்லநீயே
தாயும் வேணும் தாரமும் வேணும் - ஆனால்
தாரத்திற்காய் தாயை தூக்கி எறியக்கூடாது....
தாரம் அழகு தான், ஆசையும் எமக்கு அவள்மேல்
கூடத்தான்.... ஆயினும் தாயின்றி நீயுமுண்டோ?
Tuesday, May 6, 2008
இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த இப்பாரதனில்
இன்று இலக்கியம் படைக்கும் மாமேதைகள்....
உண்மை மேதைகளுக்கு விலக்குண்டாயினும்
பொய்மைப் புகழ் விரும்பிகளும் இலக்கியவாதிகளாய்
இனங்காட்டும் ஈனம் அவர்க்கு மட்டுமல்ல தமிழுக்கும்
இழிவாமே ஏனறியார் இம்மூடர்....
இலக்கணமும் இறந்தாச்சு - சங்க
இலக்கியமும் மறந்தாச்சு - அற்பப்
புகழ் விரும்பும் பேய்களின் கையில்
தமிழ் மணமும் நாறிப்போயாச்சு....
அர்த்தமில்லா கதைகளெல்லாம்
காவியமென போற்றப்படுதலாச்சு
கேடுகெட்ட வசனமெல்லாம்
கவிதை என புகழும் பெற்றாச்சு....
கட்டுக்கட்டாய் புத்தகங்கள் - குறை விலையில்
அச்சுப் பதிச்சாச்சு... - வேலையற்ற மாக்களுடன் கூடி
வெளியீட்டு விழாவும் நடத்தியாச்சு....
சங்கமாவது கிங்கமாவது - யார் எமைக்கேட்பார் ?
காசிருந்தால் கண்டதும் எழுதும் 'பண்டிதரும்'
இனி இலக்கிய மேதை தான்!
Wednesday, April 16, 2008
அணுவினைத்துளைத்து.......
Monday, April 14, 2008
காப்பீரே இப்புவியை!

Sunday, March 23, 2008
உயிர் காப்போர்!
உயிர் தந்த இறைவனொப்ப உயிர் காக்கும்Saturday, March 15, 2008
இரண்டு இஞ்சிக் காலன்!
Wednesday, March 12, 2008
என்ன கொடுமை சார் இது?
மனிதருக்கும் விலங்குக்கும் வேறுபாடு ஓரறிவாம்அந்த ஓரறிவு பகுத்தறியும் ஆறறிவாம் - நூறறிவு
வழங்கியும் என்பயன் இம்மூடர் - தம்மை தாமழிக்கும்
மதுவுக்கோர் முற்றுப்புள்ளி வைக்காக்கால்! - அட மதமெல்லாம்
ஒன்றிசைந்தே போதிக்கும் மது ஒழிப்பு - ஆயினும் இம்
மூடரெல்லாம் ஒருமித்தே விடம் பருகும் ஈனமேனோ?
நாமாருக்கும் குடியல்லோம் எனப்பறைபவர்களும் - மது
என்றால் மடைத்தனமாய் அலைவதேனோ? - வாழத்தந்த
வாழ்வை எல்லாம் மது பருகியே அழிப்பவர் ஈனரிலும் கடையரல்லோ?
Saturday, March 8, 2008
நெட் கபெ ஜாலங்கள்!
குட்டிக் குட்டிப் பெட்டிகளினுள் - பெரிய பெரிய விடயங்களடாநெட் கபெயில் - அட மெத்தவே பயன்பட நல்லானொருவன்
விக்கி முக்கி கண்டறிந்த இணையத்தினுள் - ஆழ ஊடுருவி
தட்டித் தடுமாறி - அப்பப்பா எத்தனை பண்ணுகிறார்கள்?!
அளவோடிருந்தால் அமிர்தம், எல்லை மீறிவிட்டால் விஷம்...
இதைப்புரிந்தவன் புத்திசாலி, மற்றவன் மடையனிலும் கடையன்!
Wednesday, March 5, 2008
மொட்டுக்களைப் பறிக்காதீர்....
புதுமைப்பிறவிகள்!
Sunday, March 2, 2008
மலையகத்தின் உத்தமர்கள்!

மலையகம் - மாடாய் தேய்ந்த மனிதர்களின் பூமி
எமக்காக, நம் நாட்டின் செல்வத்துக்காக, தம்மையே
உரமாக்கும் உத்தமர்கள் வாழும் புனித பூமி
உத்தமர்களிடயேயும் சூத்திரர்கள் பிறப்பதுண்டு!
ஆனால் பாவம் அந்த சூத்திரர்களே தலைவரானால்
உத்தமர்கள் பாடு திண்டாட்டம்தான் - தலைவர்கள் பாடு
கொண்டாட்டம் தான்! - உத்தமர் குருதியில் குளிர் காயும்
நன்றி மறந்த பன்றிகளே! - அரசியலெனும் பெயரில்
கொள்ளையடிக்கும் கபோதிகளே! - உமக்கெல்லாம் காலம்
கட்டியடித்துப் பதில் கொடுக்கும்!
Saturday, March 1, 2008
துச்சாதனர்களும் துரௌபதிகளும்!
தூற்றித்தள்ளிய தூயமகளிர் - இன்று தியேட்டர்களில்
துயிலுரிந்தாடும் துன்பத்தை மட்டும் தூக்கி எரிந்ததேன்?
ஆண் உரிந்தால் உரிமை மீறல் - நாமே உரிந்தால்
உரிமை மீட்டல் என்பதாலா? - அட மூடப்பெண்ணே
யாருரிந்தாலும் அவமானம் உனக்கன்றோ!
Thursday, February 28, 2008
கண்ணீரில் கரைகின்றேன்!
தமிழ்க் கதைகளை தமிழன் ஆர்வமுடன் படிக்கநல்ல கதை தந்தவர் - விகடனில் நீவிர் எழுதிய
தொடரைப் படிக்கத் தவறியதுமில்லை - 21ம்
நூற்றாண்டு கண்ட அற்புத இலக்கியவாதிகளுளொருவரே!
தமிழிலும் அறிவியல் கண்டவரே சுஜாதா....!
உம்மையும் பறித்த காலனுக்குமோர் மனமுண்டோ!
உமது பிரிவினால் துயருறும் தமிழ் நெஞ்சங்களுடன் கூடி
நானுங் கண்ணீரில் கரைகின்றேன்!
Tuesday, February 26, 2008
Wednesday, February 20, 2008
காலையுந்தான் போர்க்களமானதே!
வில்லங்கமாய் மனிதன் மட்டும் விழித்துவிட்டான்.
தாயார் தம்பிள்ளைகளை வசைபாடித் துயிலெழுப்ப - இது
தாங்காத தந்தைகள் தூக்கந்தொலைக்க - காபியென்ற
பெயரில் வெந்நீர் உதடுசேர - கடன்களை நாம் கழிக்க
உப்பிலா உணவும் வாய்க்கு ருசியாய் உள்ளே போக
ஸ்கூல் வண்டிக்காரனும் ஹார்னை அழுத்த - ஐயொவென
ஓடிப்போய் அதைப்பிடித்து பிள்ளை பள்ளி செல்ல
கணவரும், மனைவியுமாய் ஒற்றைக்காலே ஒருதரத்தில்
நிலம்பட ஓடியோடியே அலுவலகஞ்செல்ல
அப்பப்பா - காலையுந்தான் போர்க்களமானதே!
Sunday, February 17, 2008
இசையின் பெயரால்...
பொப் இசை, ராக் இசை, ராப் இசை, ரெக்கே இசை - என
இசையின் பெயரால் வசை பாடும் நசைகளே!
இசையின் தசையாம் ஸ்ருதியும் லயமும் மறந்தோ
உங்களுக்கு - அட மூடா, இசையும் உனக்கொரு கேடோ?
இதுவும் புரிபவருக்கு புரியும்....
அழிந்த பாலையுமிது - வம்பு புரிபவர் அன்பர்
என ஆதரிக்கப்படும் 'நல்ல' தேசமும் இது!
ஐயோ இவரைபோல் இவர் தேசமும் போனதோ பாழாய்!
Wednesday, February 13, 2008
இனியாயினும் விழித்திடுங்கள்!
இன்பம் தேடி அலையும் வாழ்வு அன்றும் இன்றும் - ஆனால்
இன்பத்தை இன்பமாக அனுபவித்த காலம்போய்
ஒரு நாள் இன்பம் காண ஒரு ஆயுளையே பணயம்வைத்து
வீரவிளையாட்டில் வீணடிக்கும் வீணர்களே - இனியாயினும்
விழித்திடுங்கள்!
Monday, February 11, 2008
டியூஷன் மாஸ்டர்மாரே கேளுங்கள்...
எழுத்தறிவிப்பவர்கள் பலருக்கு எமனாகும் காலமிதுவோ?
டியுடரி கிளாஸ் ஒரு பீஸ் பர்சனல் கிளாஸ் ஒரு பீஸ்
எனகல்விக்கு விலை பேசும் கனவான்களே - நீரும் வாழ்வீர்!
Sunday, February 10, 2008
இன்றைய மாணவர்களின் நிலை கண்டு.....
அதுபோல இன்றைய மாணவனும் அங்குமிங்குமாய்
அலைந்து உழன்று டியூஷன் போய் படிக்கிறான்
பாவம் அப்பன் - அவன் காசன்றோ கரைகிறது
இன்றைய மாணவன் மாட்டினும் கடையன்
அதுவாயினும் உண்டபின் அசை போடும்
எம் மாணவன் நுனிப்புல் மேய்ந்த மட்டுந்தான்!
Saturday, February 9, 2008
மனிதநேயம்
நேசம் என்ற பண்பில்லாப் புலையன்
மனித வாசமே ஈதென்றறியா அம்மூடனை
மோசம் போகச்சொல்வதில் குற்றமேதுமில்லையே!
கற்பு
கற்பிற்கும் ஆப்பு வைக்க புறப்பட்டு விட்டார்கள் நம்மிள
மங்கைகள் - பாவம், இது அவர்தவறில்லை - என்னிடம்
ஒன்றிருந்தால் தானே அதன் அவசியம் என்க்குப் புரியும்!
அழகிய தமிழ் மகன் பார்த்தேன்!
பழைய மரக்கறிகள், கறிகள் யாவுக்கும் புத்துயிர்புகுத்தும்
பிரம்மாக்களின் கலையது! - ஆனால்உணவு பழசானாலும் - சமைத்தவிதம்
அதை புதுப்பிக்கும்!இதுவன்ன சாம்பார்தான் அழகிய தமிழ் மகன்
ஆனால்பாவம் அதைச்சுவைத்த பின் அழுகிறான் தமிழ் மகன்!
பிச்சையெடுக்காதீர்
அதுவே நல்ல தொழில் என்ற காலம் பிறந்ததுபோல
வீதியோரமெல்லாம் கர்ணபிரபுக்களைத்தேடி யாசகர்கள்!
நோகாமல் நுங்கு பருகும் இதுவும் ஒரு தொழிலாம்!
முடியாதவன் யாசித்தால் அதுவவன் இயலாமை
முடிந்தவன் யாசித்தால் அதுவவன் சோம்பேறித்தனம்।
உடல்வலிமையிருந்துமுழைக்காத சோம்பேறிகளே
உங்களைவிட உடல் விற்றுப் பிழைப்போர் மேலடா!
Friday, February 8, 2008
அரசியல் வியா(வா)திகள்!
இதுதான் இவர்களின் பித்து,சொல்வார்கள் பத்து
இவரிடம் சேர்கிறது சொத்து, இன்னும் எங்கள் வாழ்க்கையோ புத்து
அரசியல் என்ற முத்து, உங்களால் அழிந்ததன் சத்து!
செல்போன் சாதனையாளர்கள்
சோனி எரிக்சனுடன் வாழ்ந்து, எல்।ஜியுடன் மடியும் வாழ்வடா!
சங்கத் தமிழர் படைத்த சாதனையெல்லாம் - இவர்கள்
மொபைல் பேசிப் பேசியே சாதிப்பார்களோ?
இது புரிபவருக்குப் புரியும்!
அரிக்கும் மானிடனுக்கும் பிறந்த பிறப்பாம்!
இருக்கட்டும் பரவாயில்லை - ஏனெனில்
குலப்பிறப்பில் துளியும் ஐயமி்ல்லை!
காலிலே முள் குத்திவிட்டதென தலைக்கு கவசம்
போடுமிவரை மூடரென நான் கூறவும் வேண்டுமோ?
தலைவர்களின் பாதுகாப்பைப் பார்த்தேன்
ஒரு குதிரைக்குப் பாதுகாப்பாய் பத்தாயிரம் கழுதைகளாம்!
பார் காக்கும் மன்னவனே பயந்து நடுங்கி ஒடுங்கிக் கிடந்தால்...
அவன் காக்கும் பாரோரை யார் காப்பான் - அட கடவு(ளா?)ளே
Thursday, February 7, 2008
பாதையோரத்தை அசிங்கப்படுத்தாதீர்கள்
பாதையோரத்தே மூத்திரமடிக்கும்போது - சாத்திரத்தையும்
கோத்திரத்தையும் மறப்பதேனோ? - நாமும் அதுவுஞ்செய்வது
ஒன்றானால்,நமக்கிடையே வேறுபாடென்றுமொன்றுண்டோ?
அதுவடித்தால் சாபமடா, நீயடித்தால் விமோசனமோ?
இங்கு மூத்திரமும் பிழையில்லை - சாத்திரமும் பிழையில்லை
உன் வாழ்வெனும் கதையி்ல் உன் பாத்திரமே பிழை!
பழனி படம் பார்த்த பின்னர்
இந்த ஞானசூனியங்களோ சினிமாவெனும் விளக்கை கமர்ஷியலெனும்
துணியாலணைக்கின்றன - பஞ்சாமிர்தமென சாக்கடைச்சேற்றுக்கு மைவண்ணம்
அப்பி - மூடருக்குப் பிரசாதமெனத் தருகிறான் (மா“மா)மன்னன்”!
காளை படம் பார்த்த பின்னர்
கட்டிலும் காமமுமில்லாப்படமவன் சரிதையிலுண்டெனக்
காட்டவோர் படமெடுக்கவே - காட்டினான் ஒரு எருமையின் “கதை”
ஐயோ! அக்கதையில் உண்டோ ஏதும் கதை?
இலங்கையின் இன்றைய நிலை
இங்கு சில மூடரும் பள்ளிகளை மூடிவிட்டனர்!(?)
சளி பிடித்ததால் மூக்கையே வெட்டிவிடும் மூடரும்
இப்புவியிலுள்ளனரென்பது உண்மையன்றோ?...(நானறியேன்)
Wednesday, February 6, 2008
நடிகர்களும் தமிழினமும்
இளையதென்பார், புரட்சியென்பார், லிட்டிலுமென்பார்
இவர்தான் எந்தெய்வமுமென்பார் - கூத்தாடுவதும்
குண்டிநெழிப்பதும் ஆத்தாதான் செயலென்று அறியாமூடர்!
தொலைக்காட்சியும் எம் சமூகமும்
இவையெல்லாந் தெய்வமென்பர் - தருமருள்
நெடுந்தொடரென்பார், அதனாற்றமக்கு முத்தி என்பர்
வேறுசோலியற்றுக் கிடக்கும் நரகத்தின் அம்சமன்னார்!
நடிகைகளும் எம் சமூகமும்
அவர்க்கு கோயிலுங்கட்டி, தோத்திரமுங்கூறும் ஈனரே!
தன்னுடல்விற்று வயிறு பிழைக்கும்
பரத்தையருமுமக்குத் தெய்வங்களோ?
ஆங்கில மோகம்
டாடியென்றும் கூறிக் கெடுத்த என்சமூகம்
சும்மாவோர் ஓரத்திற் சுருண்டு கிடந்த
நாயைப் பப்பி, பப்பி என்றதாம்!
இன்றைய இளையோர் நிலை
கல்வியைக் கோட்டைவிடும் கோணங்கிகளே!
சினிமாவுக்கு காதல் பணம்!, வீரனுக்கு கிரிக்கட் பணம்!
அட மூடா படித்தால் தான் உனக்குப் பணம்!
தமிழின் சாபக்கேடு
உளறித் தள்ளும் உதவாக்கரையே!
உன் தாயையுங் கூட நாளை
அம்மாவிற்குப் பதில் சும்மா என்பாயோ?

Tamil Poems by Puthiya Kalamegam is licensed under a Creative Commons Attribution-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at www.puthiya-kalamegam.blogspot.com.
உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்
தங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்த்திருக்கிறேன்.
அன்புடன்,
என்.கே.அஷோக்பரன்








